Friday, September 14, 2012

அன்னை

அன்னை மடி சொர்க்கமடி
வஞ்சம் அங்கு இல்லையடி

அன்பு மட்டும் வாழுமிடம்
அன்னை நெஞ்சம் பாருங்கடி

நூறு சொந்தம் சுற்றியிருந்தும்
சொத்து சுகம் கொட்டியிருந்தும்

அன்னை அன்பு இல்லையென்றால்
இன்பம் அங்கு இல்லையடி

அன்னை எந்தன் தெய்வமடி
அன்னை அன்பு சுத்தமடி

அன்னை எந்தன் பக்கமிருந்தால்
வேறு தெய்வம் ஏதுக்கடி


No comments:

Post a Comment